இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி
இதன் மூலம் இரு நாடுகளும் தன்னை பார்த்து பயப்படும் என்று அது நினைத்து விட்டது. இதற்காகவே இரு நாடுகளிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவித்து ஆதரித்து வந்துள்ளது என்றும் ஹில்லாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், இரு நாடுகளும் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளது பாகிஸ்தான். இதை யாரும் மறுக்க முடியாது. தீவிரவாத அமைப்புகளுக்கு அது தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது.
ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. நிலைமை மாறியுள்ளது. அதேசமயம், இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதை நிறுத்தி விட்டதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நிலைமை முன்பு போல இல்லை, மாறி விட்டது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். முற்றிலும் மாறி விட்டதா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது என்றார் ஹில்லாரி.