சென்செக்ஸில் 432 புள்ளிகள் சரிவு!
மும்பை: வாரத்தின் இறுதி நாளான நேற்று இந்தியப் பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்தன. ஒரே நாளில் 432 புள்ளிகள் சரிந்தது மும்பை பங்குச் சந்தையில்.
நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 432 புள்ளிகள் சரிந்து 20,156 புள்ளிகளாக முடிவடைந்தது. தேசியப் பங்குச் சந்தையில் குறியீட்டெண் நிஃப்டி, 122 புள்ளிகள் சரிந்து 6071 புள்ளிகளாக நிலைப் பெற்றது.
இந்தியா புல்ஸ், டாக்டர் ரெட்டிஸ், காடில்லா ஹெல்த், ஐடியா செலுலார், டிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ போன்ற நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.
டிஎல்எஃப், ரேணுகா சுகர்ஸ், ஹிந்துஸ்தான் ஆயில், அப்பல்லோ டயர்ஸ், யுனிடெக், எஸ்ஸார் ஆயில் போன்ற நிறுவனப் பங்குகள் சரிவடைந்தன.
ரிலையன்ஸ் பங்குகள் ரூ 20 வரை விலை வீழ்ச்சி கண்டன.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சிப் போக்கே காணப்பட்டது. ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் இதே நிலை நிலவியது.