முதல்வராய் இருப்பதைவிட மக்கள் சேவகனாய் இருப்பதே எனது நோக்கம்: -நரேந்திர மோடி
டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நான் கடந்த 2001-ம் ஆண்டு முதல்வராய் பதவியேற்றபோது குஜராத் பல சவால்களை எதிர்கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட கடுமையான பூகம்பத்தில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
இது தவிர கல்வி, வேலைவாய்ப்பு, விவசாயம் போன்ற பல துறைகளில் குஜராத் பின் தங்கியிருந்தது. தற்போது அனைத்து துறைகளிலும் முன்னேற்றப் பாதையில் செல்கிறது.
குஜராத் கிராமங்களில் தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. பள்ளிகளில் 100 சதவிகித குழந்தைகள் படிக்கின்றனர். அனைவரும் நலமாய் வாழ வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
வருமை ஒழிப்பு இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்காக மாநிலம் முழுவதும் 350 மேளாக்கள் நடத்தப்பட்டன. அவற்றின் மூலம் 18 ஆயிரம் கிராமங்கள், 159 நகரசபைகள், 7 மாநகராட்சிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் கண்டறியப்பட்டனர்.
இதில் மாநிலத்தில் உள்ள 225 தாலுக்காக்களில் இருந்த 45 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளன என்று அறியப்பட்டு அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த ரூ. 4, 500 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டது.
அரசுடன் மக்களும் இணைந்து செயல்பட்டு மாநிலத்தில் 5 லட்சம் நீர் ஆதாரங்களை உருவாக்கினர். தற்போது நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
குஜராத் மாநில அமைச்சர்களும், அதிகாரிகளும் கிராம மற்றும் நகரப் பள்ளிகளுக்குச் சென்று அங்கேயே 3 நாட்கள் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தால் தான் கல்வி வளர்ச்சி அடைய வழி வகுக்கலாம்.
தல்வராய் இருப்பதைவிட மக்கள் சேவகனாய் இருப்பதே எனது நோக்கமாகும்," என்றார் மோடி.