நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் உதவி: கருணாநிதி
சென்னை: சத்தீஸ்கரில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் உயிர் இழந்த 2 தமிழக போலீசாரின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த நக்சலைட்டுகள் தாக்குதலில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் 10 பேர் உயிர் இழந்தனர். இதில் 2 தமிழக காவலர்களும் அடக்கம்.
மத்திய பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பணிபுரிந்த சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டம், கல்பகனூர் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்த விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டம் கான்சாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் ஆகிய இருவரும் தான் நக்சலைட் தாக்குதலில் இறந்தவர்கள் ஆவர்.
இவர்கள் நாட்டுக்காக செய்த தியாகத்தை மதித்து அவர்கள் குடும்பத்துக்கு பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 5லட்சம் நிவாரண நிதியுதவி வழங்குமாறு கருணாநிதி உத்தவிட்டுள்ளார்.