For Daily Alerts
Just In
2 ஜி முறைகேட்டுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை உறுதி! - பிரதமர்
2 ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் தொடர்பாக அத்துறையின் அமைச்சராக இருந்த ஆ ராசா பதவி விலகினார். ஆனாலும் பாராளுமன்றம் கடந்த ஆறு நாட்களாக செயல்படாமல் முடங்கிய நிலையில் உள்ளது.
பிரதமரோ இதுகுறித்து எதுவும் கூறாமல் இருந்தார். இப்போது முதல்முறையாக இதுகுறித்துப் பேசியுள்ளார்.
பாராளுமன்றம் வழக்கம்போல் சுமுகமாக இயங்குவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், எந்த விவகாரத்தையும் விவாதிப்பதற்கு தயாராக இருப்பதாகவும், எதற்கும் பயப்படவில்லை என்றும் பிரதமர் மன்மோகன் தெரிவித்துள்ளார்.
2 ஜி விவகாரத்தில் தவறாக நடந்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நிச்சயம் நீதிக்கு முன் நிறுத்தப் படுவார்கள். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம், என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments
Story first published: Saturday, November 20, 2010, 14:48 [IST]