For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்குச் சந்தைகளுக்கு கெட்ட செய்தி-சென்செக்ஸ் மேலும் சரியும் என ஆய்வாளர்கள் தகவல்

Google Oneindia Tamil News

Mumbai Stock Exchange
டெல்லி: வரும் நாட்களில் மும்பை பங்குச் சந்தையில், சென்செக்ஸ் மேலும் சரியும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரமே இதற்கு முக்கியக் காரணம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அரசியல் ஸ்திரத்தன்மைக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் எதிரொலிப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கடந்த வாரத்தில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 571.45 புள்ளிகள் வரை அதாவது 2.83 சதவீத அளவுக்கு சரிந்தது.

இதுகுறித்து யூனிகான் நிதி நிறுவன துணைத் தலைவர் மதுமிதா கோஷ் கூறுகையில், பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் தற்போது பங்குச் சந்தை வர்த்தகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் சென்செக்ஸில் சரிவு ஏற்படுகிறது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X