For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதுராந்தகம் அருகே அரசு பஸ் டயர் கழன்று ஓடியது: 30 பயணிகள் தப்பினர்!

Google Oneindia Tamil News

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே இன்று காலை அரசுப் பேருந்தில் இருந்து ஒரு டயர் தானாகக் கழன்று ஓடியது. இருப்பினும் பேருந்தில் இருந்த 30 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு இரும்பேடு கிராமம் நோக்கி 30 பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது.

மதுராந்தகம் ரயில்வே கேட் அருகே சென்று கொணடிருக்கையில் பேருந்தின் முன் பக்க டயர் ஒன்று தானாகக் கழன்று சாலையில் ஓடியது. இதையடுத்து பேருந்து நிலைகுலைந்து ஒரு பக்கம் குடை சாய்ந்து கொண்டே ஓடியது. இதைப் பார்த்த பயணிகள் பயத்தில் கூச்சல் போட்டனர்.

இதையடுத்து பேருந்து ஓட்டுநர் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டு, கஷ்டப்பட்டு பேருந்தை நிறுத்தினார். இதனால் பயணிகள் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பினர். நடுரோட்டில் நின்ற இந்த பேருந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து பொது மக்கள் கூறியதாவது,

ஒழுங்கான சாலை இல்லாததால் தான் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இத்துடன் மழை பெய்து சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X