For Daily Alerts
Just In
நீரா ராடியாவைத் தொடர்ந்து ராஜா உதவியாளர்களை விசாரிக்கிறது அமலாக்கப் பிரிவு
இவர்களில் சந்தோலியா, ராஜா அமைச்சராக இருந்தபோது, 2008ம் ஆண்டு அவரது தனிச் செயலாளராக இருந்தவர். சமீபத்தில் கபில் சிபல் புதிய அமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே, இவர் தாய்ப் பணியான இந்திய பொருளாதாரப் பணிக்கு (Indian Economic Services) சேவைக்கு அனுப்பப்பட்டு விட்டார்.
ஸ்ரீவத்சவா, முதுநிலை துணை இயக்குநர் ஜெனரலாக (அகஸ்ஸ் சர்வீஸ்) இருந்தவர். இவரும் தற்போது அப்பணியலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் ராஜாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். எனவே ராடியாவைப் போல இவர்களையும் விசாரிக்க அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது.
ராடியாவிடம் புதன்கிழமையன்று கிட்டத்தட்ட 7 மணி நேரம் தீவிர விசாரணை நடத்திது அமலாக்கப் பிரிவு என்பது நினைவிருக்கலாம்.
Comments
Story first published: Friday, November 26, 2010, 18:26 [IST]