For Daily Alerts
Just In
சீனாவில் விபரீதம் : கூட்டநெரிசலில் சிக்கி 100 பள்ளிக் குழந்தைகள் காயம்
பெய்ஜிங்: வடமேற்கு சீனாவில் உள்ள ஒரு துவக்கப் பள்ளியில் இன்று ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி சுமார் 100 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
தன்னாட்சிப் பகுதியான சிங்சியாங் உக்யுரில் உள்ளது அக்சு நகர். அங்குள்ள துவக்கப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானத்திற்குச் செல்ல மாடியில் இருந்து ஒருவரை ஒருவர் முந்தியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இதில் சில குழந்தைகள் கால் இடறி விழுந்துள்ளார்கள். இதையடுத்து வரிசையாக ஏராளமான குழந்தைகள் விழுந்தனர். இதில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொணடு சென்றனர். இது வரை எந்த உயிர் இழப்பும் இல்லை என்று சிங்குவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தப் பள்ளியில் 1,800-க்கும் அதிகமான குழந்தைகள் படிக்கின்றனர்.
Comments
Story first published: Monday, November 29, 2010, 15:44 [IST]