பீகாரில் நக்சலைட்கள்-குற்றவாளிகள் இடையே துப்பாக்கி சண்டை: 12 பேர் பலி
முங்கேர்: பீகார் மாநிலம் முங்கேர் மாவட்டத்தில் மாவோயிஸ்ட்களுக்கும் ஒரு குற்றவாளி கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 கிராமத்தாரும், 10 நக்சலைட்டுகளும் கொல்லப்பட்டனர்.
இது குறித்து எஸ். பி. சுனில் நாயக் கூறியதாவது,
கடந்த திங்கள்கிழமை இரவு ஹிரான்மன் பகுதியில் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
இது வரை 4 கிராமத்தினர் உடல்களும், 2 நக்சலைட்டுகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றவாளிக் கும்பல் இந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்த நக்சலைட்டுகளின் உடல்களை துண்டு துண்டாக துண்டாக்கி கந்தக் நதியில் வீசியுள்ளது. மற்றவர்களின் உடல்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உளவுத் துறை தகவலின்படி பொது மக்கள் அந்த பகுதி நக்சலைட்டுகளின் மூர்க்கத்தனமான செயல்களால் வெறுப்படைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.