சூடான் அதிபரைப் போல ராஜபக்சேவும் கைது செய்யப்பட வேண்டும்! - மலேசிய எம்பி

Subscribe to Oneindia Tamil

Kulasekaran
கோலாலம்பூர்: போர்க் குற்றம் புரிந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

லண்டன் வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழர்களின் எதிர்ப்பால் தனது சகாக்களுடன் தன் நாட்டுக்கு தப்பிச் சென்றது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தில் ராஜபக்சேவின் உரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், இனப்படுகொலை புரிந்த ராஜபக்சேவுக்கு உலகின் எந்த நாட்டின் பல்கலைக்கழகங்களிலும் உரை நிகழ்த்த வாய்ப்பு வழங்கக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

இனப்படுகொலை புரிந்த சூடான் அதிபரை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதுபோல் இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும்.

விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ்ப் பெண்களை இலங்கையில் ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக் கொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஐ.நா. சபை விசாரணையை விரைவுபடுத்தி ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர முயற்சி எடுக்க வேண்டும்..."

- இவ்வாறு தனது அறிக்கையில் மலேசிய எம்.பி. குலசேகரன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+