For Daily Alerts
Just In
திருச்செந்தூர்-மதுரை மீனாட்சி அம்மன் ஆலயங்களில் எதியூரப்பா வழிபாடு
இன்று காலை தனி விமானத்தில் அவர் பெங்களூரிலிருந்து தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து காரில் திருச்செந்தூர் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
அங்குள்ள சத்ரு சம்ஹாரமூர்த்தி சன்னிதியில் நடந்த எதிரிகளை வீழ்த்தும் சிறப்பு யாகத்திலும் அவர் பங்கேற்றார்.
பின்னர் தூத்துக்குடி திரும்பி அங்கிருந்து விமானம் மூலம் மதுரை செல்லும் அவர் மீனாட்சி அம்மன் கோயிலிலும் தரிசனம் செய்கிறார்.
சில மாதங்களுக்கு முன் தனது முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டபோது, கும்பகோணம் உப்பிளியப்பன் கோயிலில் எதியூரப்பா தரிசனம் செய்ததும், கோயிலுக்கு ரூ. 1 கோடி நிதி அளித்தும் குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Saturday, December 4, 2010, 14:07 [IST]