For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் உஷார் நிலை!

Google Oneindia Tamil News

Ayodhya Demolition
டெல்லி: இன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆவதையொட்டி உத்தரபிரதேசம் உள்ளிட்ட பதட்டம் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகளில் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் இரட்டை நகரங்களான அயோத்தி மற்றும் பைசாபாத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
வாரனாசி மற்றும் மதுராவிலும், மேலும் பதட்டமான பகுதிகளான அலிகார், லக்னோ, கோரக்பூர், மொராதாபாத், மீருட், கான்பூர் ஆகிய இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதிரடிப் படையினர், போலீசார், ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தவிர குஜராத், மகாராஸ்டிரா, ராஜஸ்தான் மற்றும் அனைத்து தென் மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அகமதாபாத், சூரத், மும்பை, பிவான்டி (மகாராஸ்டிரா), ஹைதராபாத், கோயம்புத்தூர், பெங்களூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் தீர்பபு அளிக்கப்பட்டது. அந்த நிலத்தை மூன்றாகப் பிரித்தது. ஒரு பகுதி ராமர் கோவிலுக்கும், ஒன்று நிர்மோகி அஹராவுக்கும், மற்றொன்று சன்னி வக்பு வாரியத்திறகும் பிரித்துக் கொடுக்க அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்த்ககது.

இந்தத் தீ்ர்ப்பை எதிர்த்து இரு மதத்தினரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X