For Daily Alerts
Just In
தென்காசியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்: உயர்நீதிமன்ற நீதிபதி தனபாலன்
தென்காசி: தென்காசியில் இடம் தேர்வு செய்யப்பட்டு விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன் தெரிவித்தார்.
தென்காசி பழைய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வந்த வளாகத்தில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து அங்கு நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கான சாத்திய கூறுகளை உயர் நீதிமன்ற நீதிபதி தனபாலன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் முன்னதாக பல இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பிறகு ரத்தாகிவிட்டது. இந்த இடத்திலாவது நீதிமன்றம் அமையுமா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் தற்போது தான் இடத்தை பார்வையிட்டிருக்கிறோம். நீதிமன்றம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆராய்ந்து விரைவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்றார்.
Comments
English summary
HC judge Dhanabalan went to Tenkasi yesterday to see lands for integrated court complex. Later he told reporters that soon Tenkasi will have integrated court complex.
Story first published: Tuesday, December 21, 2010, 15:46 [IST]