அதிமுக தனித்து போட்டியிட்டாலும் ஆட்சியைப் பிடிக்கும்-ராதாரவி
திருச்சி: யாருடனும் கூட்டணி சேராமல் தனியாக போட்டியிட முடிவு செய்தாலும் அதிமுக வென்று ஆட்சியைப் பிடிக்கும் என்று பேசியுள்ளார் நடிகர் ராதாரவி.
சமீபத்தில் மீண்டும் அதிமுகவில் வந்து இணைந்தவர் ராதாரவி. தற்போது ஊர் ஊராகப் போய் அதிமுக கூட்டங்களில் பேசி வருகிறார்.
அந்த வகையில், திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி சார்பில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்த கண்டன பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு ராதாரவி பேசுகையில், வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டாலும் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும். காரணம் தமிழ்நாட்டில் இளைஞர்கள் மத்தியில் மாபெரும் எழுச்சியை காணமுடிகிறது.
பட்டதாரிகள், படித்தவர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். அந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு கெட்டு போய் இருக்கிறது. எனவே மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி ஏற்படுவது உறுதி என்று பேசினார் ராதாரவி.