நிச்சயம் அதிமுக கூட்டணிக்கு வருவார் விஜயகாந்த்-கூறுகிறார் ராதாரவி
நாமக்கல்: அதிமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது உறுதி என்று கூறியுள்ளார் அதிமுக மேடைப் பேச்சாளர் ராதாரவி.
நாமக்கல்லில் நடந்த அதிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,
அதிக தொண்டர்கள் நிறைந்த இயக்கமாக அ.தி.மு.க. விளங்குகிறது. எம்.ஜி.ஆர். உருவாக்கிய இந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது.
தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த 2 ஏக்கர் இலவச நிலம் முழுமையாக வழங்கப் படவில்லை.அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மழைநீர் சேகரிப்பு திட்டம், மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தற்போதும் தொடர்கிறது.
வருகிற தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு ஓட்டுப் போட வேண்டும். விஜயகாந்த் தலைமையிலான தே.மு. தி.க. அ.தி.மு.க.வில் சேரும் நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதாவால் மட்டும் தான் நல்லாட்சி தர முடியும். நிச்சயம் தேமுதிக, அதிமுக கூட்டணிக்கு வரும், இது உறுதி என்றார் அவர்.