For Daily Alerts
Just In
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடனுக்கான வட்டி உயர்வு
தூத்துக்குடி: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் வணிக வளர்ச்சி துறையின் பொது மேலாளர் எஸ். செல்வன் ராஜதுரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 1-1-2011 முதல் கடன்களுக்கான முதன்மை வட்டி விகிதம் மற்றும் அடிப்படை வட்டி விகிதத்தினை 0.50 சதவீதம் அதிகரித்துள்ளது.
முதன்மை வட்டி விகித குறியீட்டு அளவை 14.50 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகவும், அடிப்படை வட்டி விகித குறியீட்டு அளவை 9 சதவீதத்தில் இருந்து 9.50 சதவீதமாகவும் உயர்த்தியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
English summary
Tamilnadu Mercantile Bank has increased the interest rates for loans. This comes into effect from 1-1-2011.
Story first published: Sunday, January 9, 2011, 13:44 [IST]