காரைக்கால் அதிமுக செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
காரைக்கால்: காரைக்கால் அதிமுக நகரச் செயலாளர் வீடு மீது இன்று அதிகாலையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் அதிமுக நகரச் செயலாளராக இருப்பவர் ஜெ.வி.ஜெயபால். இன்று அதிகாலை 2 மணி அளவில் அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.
இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் முதலியவை சேதமடைந்தன. ஆனால் அவரது குடும்பத்தினர் பத்திரமாக உயிர் தப்பினர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஜெயபால் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் ஜெயபால் வீடு முன்பு குவிந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.