For Daily Alerts
Just In
மானாமதுரை அருகே கணவனை வெட்டிக் கொன்ற மனைவி கைது
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் குடித்துவிட்டு அடித்து கொடுமைபடுத்திய கணவனை மனைவி அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார்.
மானாமதுரை அருகே உள்ள செய்யார்கோட்டையில் ஒரு கணவன் தினமும் குடித்துவிட்டு தன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் அந்த மனைவி ஆத்திரம் அடைந்தார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று இரவு கணவன் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் அவர் தூங்கியதும் இனியும் தன்னால் அடி தாங்க முடியாது என்ற முடிவுக்கு வந்த அந்த மனைவி அவரை அரிவாளால் வெட்டி சாய்த்தார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கதினர் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்கள் புகாரின்பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டார்.
Comments
English summary
A woman in Seyyarkottai near Manamadurai hacked her drunkard husband to death. Her husband used to drink and abuse her physically. Unable to bear the torture, she put an end to his life with a sickle.
Story first published: Tuesday, January 11, 2011, 11:48 [IST]