தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
மதுரை: தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தமிழக அரசு பதவி உயர்வு வழங்கி உள்ளது.
தமிழக அரசுக்கான ஒதுக்கீட்டில் 1995- ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சுமார் 13 பேர் தேர்வு நிலை சம்பள விகிதத்தின்படி பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில், அவர்களின் தேர்வு நிலை சம்பள விகிதத்தை மாற்றி தர ஊதியம் ரூ. 10 ஆயிரம் என்ற நிலைக்கு உயர்த்தியும், பதவி நிலையை உயர்த்தியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பதவி உதவி பெற்றவர்கள் விவரம்:
1. எம்.ஏ.சித்திக், தனி செயலர் - மத்திய உள்துறை
2. ஆர்.ஜெயா, இயக்குனர் - மத்திய உள்துறை
3. பி.செந்தில்குமார், கமிஷனர் - நகராட்சி நிர்வாகத்துறை
4. சந்தியா வேணுகோபால் சர்மா, இயக்குனர் - எஸ்.எஸ்.ஏ., பெங்களூரு
5. டி.உதயசந்திரன், கமிஷனர் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்
6. ஹித்தேஷ் குமார் மக்வானா, மேலாண் இயக்குனர் - தமிழ்நாடு நகர்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம்
7. சந்தோஷ் பாபு, மேலாண் இயக்குனர் - எல்காட்
8. பி.சந்திரமோகன், கமிஷனர் - தோட்டக்கலைத்துறை
9. கே.செல்லமுத்து, கமிஷனர் - மீன்வளத்துறை
10. டி.ராஜேந்திரன் - கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி
11. எம்.வீரஷண்முகமணி, மேலாண் இயக்குனர் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்
12. ஏ.முகம்மது அஸ்லாம், இயக்குனர் - நில சீர்திருத்தத்துறை
13. ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ், கமிஷனர் - சுற்றுலாத்துறை