கூட்டுறவு வங்கியில் ரூ.54.5 லட்சம் மோசடி: 3 ஊழியர்கள் கைது
நெல்லை: தூத்துக்குடி குமராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 54 லட்சத்து 64 ஆயிரத்து 229 ரூபாய் மோசடி செய்த எழுத்தர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் குமராபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் குறுக்கு சாலையைச் சேர்ந்த சண்முகையா எழுத்தராகவும், குமராபுரத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் எடையாளராகவும், தூத்துக்குடி அம்பேத்கார் நகரைச் சேர்ந்த கணேசன் காசாளராகவும் பணியாற்றி வந்தனர்.
கடந்த 2006-2009ம் ஆண்டில் போலியாக நகை கடன் வழங்கியதாக ரூ.54 லட்சத்து 64 ஆயிரத்து 229 மோசடி செய்தது தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறி்த்து கோவில்பட்டி கூட்டுறவு சங்க துணை பதிவாளர் ஜலாலூதீன் தூத்துக்குடி வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். பின்னர் நெல்லை 2வது மாஜிஸ்திரேட் ராபின்சன் ஜார்ஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். மூவரையும் வரும் 24-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.