For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுடன் கூட்டணி அமைப்போம்-மனித நேய மக்கள் கட்சி

Google Oneindia Tamil News

சென்னை: வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போவதாக மனித நேய மக்கள் கட்சிப் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக, மனித நேய மக்கள் கட்சியின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் சென்னை கிழக்கு தாம்பரம் கிறிஸ்து ராஜா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில்,

தி.மு.க.வை சட்டமன்ற தேர்தலில் வீழ்த்த அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு தீவிர களப்பணியாற்றுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறுகையில்,

விகிதாச்சார அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு நிர்ணயிக்க வேண்டும்; மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையினால், பன்னாட்டு நிறுவனங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதால் விலைவாசி அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து நீக்குவதே எங்களின் ஒரே கொள்கை. இதற்காக வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என பொதுக் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தமிழகம் முழுவதும் பலம் வாய்ந்துள்ள எங்கள் கட்சிக்கு கணிசமான அளவில் தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழகத்தில் எங்கள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் மட்டுமின்றி, அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் 234 தொகுதிகளிலும் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம். அதற்கான பணிகளில் தொண்டர்கள் ஈடுபடுவார்கள் என்றார் அவர்.

English summary
Manithaneya Makkal katchi to forge alliance with ADMK in TN assembly election. The party has adopted this in its state general body council held in Chennai yesterday. " We will work for the victory of ADMK alliance in the polls", party chief Jawahirullah told.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X