என் கணவருக்கு மசாஜ் பெண்ணுடன் தொடர்பில்லை: சாரா பாலின்
லண்டன்: முன்னாள் அலாஸ்கா ஆளுநர் சாரா பாலின் தனது கணவர் மசாஜ் தெரபிஸ்டுடன் தொடர்பு வைத்து தன்னை ஏமாற்றியதாக வந்த தகவல்களை மறுத்துள்ளார்.
அவர் இந்த மாத துவக்கத்தில் அலாஸ்கன் மார்னிங் ரேடியோவிற்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது,
என் கணவரைப் பற்றி வந்த தகவல்கள் உண்மையல்ல. இது நேரத்தை வீணடிக்கும் வேலை. எனது கணவர் டாட் ஒரு விபச்சார கும்பலுடன் பிடிபட்டதாக வந்தது எல்லாம் உண்மையல்ல. இது குறித்து போலீசார் தான் சொல்ல வேண்டும். இது குறித்து எந்த ஆதாரங்களும் இல்லை.
அவர்கள் என்னிடம் அல்லது எனது கணவரிடம் தான் விசாரிக்க வேண்டும். ஹே, டாட் நீங்கள் விபச்சாரிகளுடன் ஊர் சுற்றுகிறீர்களா என்று.
அப்பொழுது அவர் உண்மையை சொல்வார். இந்த தகவல் ஒரு பெரிய பொய். இது நேரத்தை வீண் அடிப்பதாகும். இந்தப் பொய் எல்லாம் எங்கள் சொந்த மாநிலமான அலாஸ்காவில் இருந்து தான் வருகிறது என்பது வேதனை அளிக்கிறது என்றார்.