கசாப்புக்கு மரண தண்டனை உறுதியாகுமா?-தீர்ப்பு தேதி நாளை அறிவிப்பு
மும்பை தனி நீதிமன்றத்தில் கசாப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை பாம்பே உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். இதுதொடர்பான வழக்கு பாம்பே உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்து. ஜனவரி 7ம் தேதி இந்த வழக்கின் விவாதங்கள், நீதிபதிகள் ரஞ்சனா தேசாய், ஆர்.வி. மோரே அடங்கிய பெஞ்ச் முன்பு முடிவடைந்தது. இதையடுத்து அடுத்த முடிவு பிப்ரவரி 7ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நாளை இந்த வழக்கு மீண்டும் வருகிறது. அப்போது தீர்ப்பு அறிவிக்கப்படும் தேதியை நீதிபதிகள் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தனது தண்டனையை எதிர்த்து கசாப் தொடர்ந்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பையும் நீதிபதிகள் கூடவே அறிவிப்பார்கள். மேலும், இந்த வழக்கிலிருந்து பஹீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மகாராஷ்டிர அரசு தாக்கல் செய்துள்ள மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பும் சேர்த்து அறிவிக்கப்படவுள்ளது.