For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியர் சமுதாயத்தினர் பாமகவுக்கு வாக்களித்தால் அன்புமணி முதல்வராவார்-குரு

By Chakra
Google Oneindia Tamil News

புதுச்சேரி: தமிழகம், புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாமகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி முதல்வராக வருவார் என்று வன்னியர் சங்கத் தலைவர் 'காடுவெட்டி' குரு கூறினார்.

புதுச்சேரி மாநில வன்னியர் சங்கம் சார்பில் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சங்க கொடியேற்று விழா அரியாங்குப்பத்தில் நடந்தது. அதில் பேசிய குரு,

புதுச்சேரி மாநிலத்தில் வன்னியர்கள் 60 முதல் 70 சதவீதம் வரை வசிக்கின்றனர். இவர்கள் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை தேர்ந்தெடுத்தால் நாம் இன்னும் வளர்ச்சி காணலாம். பிறருக்கு கொடி பிடித்து, கோஷம் போடும் நிலையை மாற்றி நாம் நாட்டை ஆள வேண்டும் என்று தான் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.

வன்னியர் சமுதாயம் மற்ற சமுதாயத்துக்கு எதிரானது அல்ல. இந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

பின்னர் டாக்டர் ராமதாஸ் வந்தார். நமக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு 1980ல் போராட்டம் அறிவித்தார். இதற்காக 21 பேர் தங்கள் இன்னுயிரை இழந்தனர். அதன் பின்புதான் இடஒதுக்கீடு கிடைத்தது. இருந்தபோதிலும் புதுவையில் இந்த இடஒதுக்கீடு இல்லாமல் இருந்தது. அதையும் போராடி பெற்றுத் தந்தார்.

எத்தனையோ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழகத்தில் முதல்வராகி உள்ளனர். ஆனால் பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தாழ்த்தப்பட்டவர் இன்னும் முதல்வராகவில்லை. இதற்காக டாக்டர் ராமதாஸ் போராடுகிறார்.

வட தமிழ்நாட்டில் 120 தொகுதிகளில் நாம் பெரும்பான்மையாக உள்ளோம். நமது சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் மாம்பழ சின்னத்திற்குதான் என்று முடிவு செய்தால், யார் தயவும் இன்றி நாம் ஆட்சியைப் பிடிக்க முடியும்.

புதிய கட்சிகள் தொடங்கும்போது அதற்காக உயிர் தியாகம் செய்பவர்கள் வன்னியர்கள்தான். ஜெயலலிதா கைதான போது பஸ் எரிப்பு வழக்கில் சிக்கி தற்போது தூக்கு தண்டனை கைதிகளாக இருப்பதும் வன்னியர்கள்தான். பல கட்சிகளை நாம் வாழ வைத்தோம். நம்மை யாரும் வாழ வைக்கவில்லை.

தமிழகம், புதுவையில் நமது தயவு இல்லாமல் யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர் சமுதாயத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து பாமகவுக்கு வாக்களித்தால் தமிழகத்தில் டாக்டர் அன்புமணி முதல்வராக வருவார்.

இந்த சமுதாயத்தை டாக்டர் ராமதாசால்தான் வாழ வைக்க முடியும் என்றார் குரு.

English summary
Vanniyar association leader Kaduvetti Guru told that no party can come to power without Vanniyar's support. Vanniyars should stand united and vote for PMK. Then Anbumani will be the next TN CM. So far no Vanniyar has become CM, that is why Ramadoss is struggling to see our community people in that esteemed post, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X