For Quick Alerts
For Daily Alerts
Just In
கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - தமிழக அரசுக்கு சரத்குமார் கோரிக்கை
மதுரை: தமிழகத்தில் அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு சமக தலைவர் சரத் குமார் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசுக் கலைக் கல்லூரிகளில் தற்காலிகமாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் அந்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. எனவே, கடந்த 8 ஆண்டுகளாக பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய முதல்வர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
Comments
English summary
SMK supremo Sarathkumar has requested the TN government to confirm college lecturers as per the promise made by DMK during 2006 assembly election. These lecturers have been working for the past 8 years without getting confirmed, he added.
Story first published: Monday, February 14, 2011, 16:37 [IST]