For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னிந்தியாவில் அதிக கிளை திறக்கும் மெக்டொனால்ட்!

By Shankar
Google Oneindia Tamil News

Mc Donald
மும்பை: துரித உணவக நிறுவனம் மெக்டொனால்ட் தென் இந்தியாவில் அதிக கிளைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மெக்டொனால்ட் துரித உணவுக் கடைகளை ஹார்ட்கேஸில் ரெஸ்டாரென்ட்ஸ் நிறுவனமும் மெக்டொனால்ட் கார்ப்பரேஷனும் இணைந்து நடத்துகின்றன.

இந்தியா முழுக்க மெக்டொனால்ட் கிளைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் பெருகி வரும் வாடிக்கையாளர்களைக் கருத்தில் கொண்டு, அடுத்த மூன்றாண்டுகளில் மேலும் ரூ 500 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். தற்போது உள்ள 125 கிளைகளை 250 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிதாகத் துவங்கும் கிளைகளில் பெரும்பாலானவை சென்னை, பெங்களூர், கொச்சி, ஹைதராபாத் போன்ற தென்னிந்திய நகரங்களை மையமாகக் கொண்டதாக இருக்கும் என ஹார்ட்கேஸில் ரெஸ்டாரென்ட்ஸின் துணைத் தலைவர் அமித் ஜாடியா தெரிவித்தார்.

English summary
Hardcastle Restaurants Private Ltd, which runs McDonald's outlets in West and South India said on Monday it will invest Rs. 500 crore over the next three years to double the number of restaurants in operation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X