For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ் பேண்ட் முறைகேடு... யாரும் சொல்லவில்லை! - பிரதமர் விளக்கம்

By Shankar
Google Oneindia Tamil News

Manmohan Singh
டெல்லி : எஸ் பேண்ட் அலைவரிசை ஒப்பந்தம் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு இதுவரை எந்த கேள்வியும் வரவில்லை என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.

எஸ் பேண்ட் எனப்படும் விண்வெளி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ 2 லட்சம் கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் துறைத் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஒதுக்கீட்டைப் பெற்ற தேவாஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம் கோடி பெறுமானமுள்ள உரிமத்தை வெறும் ரூ 1000 கோடிக்குப் பெற்றிருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எஸ் பேண்ட் விவகாரம் பெரும் சர்ச்சையையும் அமளியையும் கிளப்பியுள்ளது. ராஜ்யசபாவை, இஸ்ரோ - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக கேட்டுக்கொண்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து விளக்கம் அளித்தார். ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து இதுவரை பிரதமர் அலுவலகத்திற்கு எந்தவொரு கேள்வியும் வரவில்லை, என்று அவர் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சரவைக்கும் இஸ்ரோ தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார் மன்மோகன்சிங்.

English summary
Prime Minister Manmohan Singh on Thursday said the cabinet was not informed that the 2005 agreement between ISRO's commercial arm Antrix and Devas also involved allocation of S-band spectrum to the private firm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X