எஸ் பேண்ட் முறைகேடு... யாரும் சொல்லவில்லை! - பிரதமர் விளக்கம்
எஸ் பேண்ட் எனப்படும் விண்வெளி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ 2 லட்சம் கோடி வரை அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக மத்திய தலைமை கணக்குத் துறைத் தலைவர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஒதுக்கீட்டைப் பெற்ற தேவாஸ் நிறுவனம் ரூ. 2 லட்சம் கோடி பெறுமானமுள்ள உரிமத்தை வெறும் ரூ 1000 கோடிக்குப் பெற்றிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாராளுமன்றத்தின் இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எஸ் பேண்ட் விவகாரம் பெரும் சர்ச்சையையும் அமளியையும் கிளப்பியுள்ளது. ராஜ்யசபாவை, இஸ்ரோ - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக கேட்டுக்கொண்டது. இதையடுத்து ராஜ்யசபாவில் பிரதமர் மன்மோகன் சிங் இதுகுறித்து விளக்கம் அளித்தார். ஆன்ட்ரிக்ஸ் - தேவாஸ் ஒப்பந்தம் குறித்து இதுவரை பிரதமர் அலுவலகத்திற்கு எந்தவொரு கேள்வியும் வரவில்லை, என்று அவர் தெரிவித்தார்.
இது குறித்து அமைச்சரவைக்கும் இஸ்ரோ தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றார் மன்மோகன்சிங்.