இமாச்சல பிரதேசத்தில் 2 விபத்துகளில் 43 பேர் பலி
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் இன்று நடந்த 2 விபத்துகளில் 43 பேர் பலியாகினர், 8 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த 34 பேரும் அடக்கம் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருமண கோஷ்டியினரை ஏற்றிக் கொண்டு சௌராவில் இருந்து ஷேர்பூருக்கு சென்று கொண்டிருந்த டிரக் ஒன்று நேற்றிரவு 12.30 மணிக்கு 500 அடி பள்ளத்தில் விழுந்தது. இதில் 34 பேர் பலியாகினர்.
இது குறித்து அம்மாநில போக்குவரத்து அமைச்சர் மொஹிந்தர் சிங் கூறியதாவது,
திருமண கோஷ்டியினர் 40 பேரை ஏற்றக் கொண்டு சென்ற டிரக் ஒன்று ஷேர்பூர் அருகே 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில்
32 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தனர்.
இறந்தவர்களின் உடல்கள் பள்ளத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டன. இறந்த 32 பேரும் ஆண்கள்.
அவர்கள் அனைவரும் சௌரா கிராமத்தில் நடந்த திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு ஷேர்பூருக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் தான் இந்த துயரச் சம்பவம் நடந்தது என்றார்.