For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செரீனா வில்லியம்ஸுக்கு நுரையீரலில் ரத்தக் கட்டி: மருத்துவமனையில் அனுமதி

By Siva
Google Oneindia Tamil News

Serena Williams
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லிம்ஸுக்கு நுரையீரலில் ரத்தக் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த எல்டன் ஜான் எய்ட்ல் பவுன்டேஷன் அகாடெமி விருது விழாவில் செரீனா கலந்து கொண்டார். அதில் அவர் வழக்கம் போல அசத்தலாகக் காணப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள செடார்ஸ்-சினாய் மெடிக்கல் சென்டருக்கு செரீனா அடிக்கடி வந்து போயுள்ளார். அப்போது நடந்த பரிசோதனைகளின்போதுதான் அவரது நுரையீரலில் ரத்தக் கட்டி ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அவரது உடல் நிலைமை இந்த வாரம் மோசமானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து செரீனாவின் பிரநிதி கூறியதாவது,

செரீனா ரத்தக் கட்டி ஏற்பட்டதற்காக செடார்ஸில் அவசர சிகிச்சை பெற்றார். இது அவர் இன்னும் மோசமான நிலையில் இருக்கையில் எடுத்துக் கொண்ட சிகிச்சையினால் உருவாகியுள்ளது.

கடந்த வாரம், சொரீனாவின் நுரையீரலில் ரத்தக் கட்டி இருந்தது லாஸ் ஏஞ்சல்ஸ் வந்த பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கால் சம்பந்தமான பிரச்சனைக்காக நியூயார்கில் இருந்தார். அவர் தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார் என்றார்.

செரீனாவுக்கு அறுவைச் சிகிச்சை செய்து ரத்தக் கட்டியை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

English summary
Popular tennis star Serena Williams has been hospitalised in LA as she suffered from pulmonary embolism (a blood clot in the lungs). She is still under medical observation to avoid any additional complications.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X