புதுச்சேரியில் இரு பிரிவினருக்கிடையே கோஷ்டி மோதல்-துப்பாக்கிச் சூடு
புதுச்சேரி: புதுச்சேரி அருகே இரு கிராமங்களுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது. இதைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலம் வீராம்பட்டினம் மற்றும் அரியாங்குப்பம் ஆகிய இரு கிராமங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அரியாங்குப்பம் கிராமத்தினர் தங்களது கிராமத்தில் புகுந்து வீடுகளைத் தாக்கியதாக வீராம்பட்டினம் மக்கள் புகார் கூறினர்.
இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட இந்த மோதலால் கடைகள் அடைக்கப்பட்டன. பதட்டம் அதிகரித்தது. இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக நின்று மோதலுக்குத் தயாரானதால் போலீஸார் நிலைமையை சமாளிக்க வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர்.
இந்த நிலையில் அரியாங்குப்பம் கிராமத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் கடலூர்-புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து நிலைமை பதட்டமாக இருப்பதால் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.