For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்வர்ட் பிளாக்கை மதிக்கிறேன்-உசிலையில் போட்டியிடவில்லை: கார்த்திக்

Google Oneindia Tamil News

சென்னை: நாங்கள் தெய்வமாக வணங்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்ட் பிளாக் உசிலம்பட்டியில் போட்டியிடுவதால் அங்கு வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவரான நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்களது கட்சியின் சார்பாக போட்டியிட, ஒவ்வொரு தொகுதிக்கும் பத்து, பதினைந்து வேட்பாளர்கள் ஆர்வத்துடன் வந்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக நேர்காணலும் நடைபெற்றது.

உசிலம்பட்டி தொகுதியில் நாங்கள் வணங்கும் தெய்வமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தொடங்கிய இயக்கமான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடுவதால், அவர் மீது உண்மையான பக்தி கொண்ட நான், கிட்டத்தட்ட பதினைந்து வேட்பாளர்கள் போட்டியிட வந்தும் உசிலம்பட்டி தொகுதியில் மட்டும் எங்களது கட்சியின் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளேன்.

இந்த தீர்மானத்தை எங்களது கட்சியின் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்து, அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று கூறியுள்ளார் கார்த்திக்.

அதிமுக கூட்டணியின் அவமானத்தால் சிறுத்துப் போன கார்த்திக், முதல் ஆளாக கூட்டணியை விட்டுவெளியேறினார் என்பது நினைவிருக்கலாம். மேலும், அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து தனது கட்சி வேட்பாளர்களை நிறுத்துவேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.

English summary
We will not contest in Usilampatti, says Actor Karthik. He said that, We respect Forward bloc party, which was formed by Muthuramaliga Thevar. So we will not contest against Forward Bloc, he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X