For Daily Alerts
Just In
இந்திய அணியைக் கெளரவிக்க டீ பார்ட்டி அளிக்கிறார் குடியரசுத் தலைவர்
மும்பை: உலகக் கோப்பையை வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியைப் பாராட்டும் வகையில் இன்று தேநீர் விருந்தளித்துக் கெளரவிக்கிறார் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல்.
மும்பையில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்தியா, இலங்கை இடையிலான இறுதிப் போட்டியை பிரதீபா பாட்டீல் பார்த்து ரசித்தார். இந்தியா வெற்றி பெற்றதும், இந்திய அணிக்கு வாழ்துகளைக் கூறினார்.
இந்த நிலையில் இன்று மும்பையில், ராஜ்பவனில் வைத்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தேநீர் விருந்தளித்து அவர் கெளரவிக்கிறார்.
இன்று மாலை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் டோணி தலைமையில் இந்திய அணி வீரர்கள் மொத்தமாக கலந்து கொள்கின்றனர்.
Comments
English summary
President Pratibha Patil is hosting tea for the victorious Indian cricket team at Raj Bhavan in Mumbai today. The President is hosting tea this evening for the M S Dhoni-led squad, which won the ICC World Cup last night defeating Sri Lanka in the final, Raj Bhavan spokesperson told.
Story first published: Sunday, April 3, 2011, 17:23 [IST]