சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கிகள் தரும் சிறப்புச் சலுகை!
இதுவரை சீனியர் சிட்டிசன்களுக்கு கால் சதவீதம் அல்லது அரை சதவீதம் வரை அதிக வட்டி தந்து வந்தன வங்கிகள். இப்போது, அதில் மாற்றம் செய்து 1 சதவீதம் அதிக வட்டி தர முன் வந்துள்ளன.
15 முதல் 18 மாதங்கள் வரையிலான சீனியர் சிட்டிசன்களின் நிரந்தர வைப்புத் தொகைக்கு 10.25 சதவீதம் வரை வட்டி தர முன்வந்துள்ளன தனியார் மற்றும் அரசுடையாக்கப்பட்ட வங்கிகள்.
10 சதவீதத்துக்கு மேல் வட்டி தர பெரும் தயக்கம் காட்டியவை அரசு வங்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது வட்டியை உயர்த்தியுள்ளதற்குக் காரணம், நிரந்தர வைப்புத் தொகை முதலீட்டில் எப்போதும் ஆக்டிவாக செயல்படும் மூத்த குடிமக்களை ஊக்குவிப்பதற்காகவே என விளக்கம் அளித்துள்ளன.
60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 2.5 லட்சம் வரையிலும், 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ 5 லட்சம் வரையிலும் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இந்த நிதியாண்டிலிருந்து. அரசின் இந்த சலுகை மூத்த குடிமக்கள் முதலீட்டுக்கு பெரிதும் உதவும் என வங்கிகள் இந்த சலுகைகளை அளித்துள்ளன.