For Daily Alerts
Just In
உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஜெயலலிதா வாழ்த்து
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மகேந்திர சிங் டோணி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை போட்டிகளில் அனைத்து எதிர் அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டியில் இலங்கையும் வீழ்த்தி 28 ஆண்டுகள் கழித்து உலகக் கோப்பையை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்த அபார வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்துள்ளனர். இது மட்டும் அல்ல டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி என அனைத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதற்காக இந்திய அணிக்கும், கேப்டன் டோணிக்கும், சாதனை படைத்து வரும் டெண்டுல்கருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
ADMK leader Jayalalitha has appreciated the Indian cricket team for bringing the world cup after a period of 28 years. She praises captain Dhoni. team india and the fabulous Sachin Tendulkar for their tireless efforts.
Story first published: Monday, April 4, 2011, 15:03 [IST]