96 மணி நேர உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹஸாரே!!

தனது இந்தப் போராட்டம் மக்களுக்காக நடத்தப்பட்டது என்றும், இதற்குக் கிடைத்துள்ள வெற்றி மக்களுக்குக் கிடைத்த வெற்றி என்றும் அன்னா ஹஸாரே தெரிவித்தார்.
நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் போன்ற முக்கிய பிரமுகர்களின் ஊழலுக்கு எதிராக தற்போது தயாரிக்கப்பட்டு உள்ள லோக்பால் சட்ட வரைவு மசோதாவினால் எந்த பயனும் இல்லை என்றும், அந்த சட்ட மசோதாவை ஆய்வு செய்து சீரமைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் குழுவில் மக்கள் பிரதிநிதிகள் 50 சதவீதமும், அரசுத் தரப்பிலிருந்து 50 சதவீத உறுப்பினர்களும் இடம் பெற வேண்டும் என்றும் அன்னா ஹஸாரே கோரிக்கை விடுத்தார்.
மேலும் இதன் தலைவராக மத்திய அமைச்சரை நியமிக்கவும் ஹஸாரே எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதனை மத்திய அரசு ஏற்க மறுத்ததால், அவர் சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 4 நாட்கள் அவர் உண்ணாவிரதம் தொடர்ந்தது. பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் கேட்டுக் கொண்ட பிறகும் அவர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து ஹஸாரேவின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு ஏற்பதாக அறிவித்து, அதுகுறித்த அரசாணையை இன்று வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து, இன்று 10.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தை அவர் முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அதற்கு முன், தன்னோடு உண்ணாவிரதமிருந்த அனைவருக்கும் பழச்சாறு கொடுத்தார் ஹஸாரே. அவர்கள் அருந்தி முடித்த பல நிமிடங்களுக்குப் பிறகு, தனக்கு வந்த அரசின் அறிவிக்கையை படித்துக் காட்டிய பிறகு, பழச்சாறு அருந்தி, உண்ணாவிரதத்தை முடித்தார் ஹஸாரே.
இதன் மூலம் அவரது 96 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது.
காந்தியத்துக்கு கிடைத்த வெற்றி...
இதைத் தொடர்ந்து நாடு முழுக்க வெற்றிக் கொண்டாட்டங்கள் ஆரம்பித்துவிட்டன. இந்திய மக்களுக்கு கிடைத்த உண்மையான வெற்றி இது என கொண்டாடி வருகிறார்கள்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லி இந்த வெற்றியை கொண்டாடினர்.
இந்த நாட்டுக்கு காந்திய வழிப் போராட்டமே வெற்றியைத் தரும் என்பதற்கு ஹஸாரே ஒரு வாழும் எடுத்துக்காட்டாக உள்ளார். மக்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். சரியான போராட்டத்தின் பின்னால் அணி வகுக்க வேண்டும், என்று ஊழலுக்கு எதிரான அமைப்பினர் கருத்து தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications