அசாருதீன் மகனுடன் ஜுவாலா கட்டாவுக்குக் காதலா?
டெல்லியில் நடந்த காமன்வெல்த் பேட்மிண்டன் போட்டியி்ல் ஜுவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது. பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனுக்கும் காதல் என்று செய்திகள் வெளியாகின.
ஜுவாலாவிடம் கேட்டதற்கு இந்திய பேட்மிண்டன் அசோசியேஷனைச் சேர்ந்த யாரோ தான் தனது பெயரைக் கெடுக்க வேண்டுமென்றே இவ்வாறு வதந்திகளைப் பரப்புவதாக கூறினார்.
அதன் பிறகு ஜுவாலா பற்றிய செய்திகள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் பரபரப்புச் செய்தியாகிவிட்டார் ஜுவாலா. காரணம் அசாருடனான காதல் இல்லை மாறாக அவர் மகன் அசாதுத்தீனுடன் காதலாம். ஜுவாலா எங்கு சென்றாலும் அசாதுத்தீன் இல்லாமல் கிளம்புவதில்லையாம்.
ஹைதராபாத்தில் ஜுவாலா விளையாடுகிறார் என்றால் முதல் ஆளாக அசாதுத்தீன் ஆஜராகிவிடுகிறாராம். விளையாடி முடித்தவுடன் ஜுவாலா நேராக அசாதுத்தீன் அருகில் சென்று அமர்ந்து கொள்கிறாராம்.
என்ன ஜுவாலா இது முன்பு அசாருதீன், தற்போது அவரது மகனா என்று கேட்டால், நடிகைகள் பாணியில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்கிறார். அசாதுத்தீன் ஒரு வளர்ந்து வரும் விளையாட்டு வீரர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் பெரிய நிலைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபலம் ஆகும் முன்பே அவர் சர்ச்சையில் சிக்காமல் ஜுவாலா காப்பாற்றி வருகிறார்.
இது குறி்த்து இந்திய பேட்மிண்டன் அசோசியேஷனைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், அவர் அசாருதீனுடன் சுற்றுகிறார் என்று தெரியும். ஆனால் தற்போது அவரது மகனுடன் என்றால் எனக்கு தெரியவில்லை என்றார்.