சர்க்கஸில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பயன்படுத்த தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு
குழந்தைகளில் அடிப்படை உரிமைகளைக் காக்க அவர்களை சர்க்கஸ்களில் வேலைக்கு அமர்ததுவதற்கு தடைவிதித்து அரசு உடனே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று நீதிபதி தல்வீர் பந்தாரி அடங்கிய பெஞ்ச் கூறியுள்ளது.
சர்க்கஸ்களில் அதிரடி சோதனை நடத்தி அங்குள்ள குழந்தைகளை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
பச்பன் பச்சாவ் அன்டோலன் என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சர்க்கஸ்களில் பணிபுரியும் 14 வயதுக்குட்ப்டட குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க அரசுக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு தான் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து 10 வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை மாதம் 19-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.