For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆந்திராவில் 4 நாட்கள் துக்கம்... அரசு மரியாதையுடன் சாய்பாபா இறுதிச் சடங்கு!!

By Shankar
Google Oneindia Tamil News

Sathya Sai Baba
ஹைதராபாத்: சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது.

பாபாவின் இறுதிச்சடங்கில் அவரது உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் வரும் பு‌தன்கிழமை பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் சமாதியில் வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆந்திர ஆளுநர் ஈஎஸ்எல் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் புட்டபர்த்தியில் முகாமிட்டுள்ளனர்.

பாபாவின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை என்றும், அவரது உடல் சமாதிக்குள் வைக்கப்படும் புதன் கிழமையும் அனந்தப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை என்றும் ஆந்திரப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் கிரண் குமார் ரெட்டி கூறுகையில், "சத்ய சாய்பாபாவின் ஆன்மீக, சமூக சேவைகள் அளப்பரியவை. தெலுங்கானா மற்றும் ராயலசீமா மக்களின் தாகம் தீர்த்த மாமனிதர் அவர். இந்தியா முழுவதும் அவரது பணிகள் பரந்து விரிந்துள்ளன. கல்வித் துறையில் அவரது சேவைக்கு நிகரில்லை," என்றார்.

சாய்பாபாவுக்கு பக்தர்கள் அஞ்சலி-படங்கள்

English summary
The Andhra Pradesh Government has a declared four-day State mourning, including Sunday, in view of the death of spiritual leader Sathya Sai Baba at Puttaparthi.Chief Minister N. Kiran Kumar Reddy, who air dashed to Puttaparthi along with Governor E.S.L. Narasimhan on Sunday morning, also declared a holiday in Anantapur district on Wednesday, the day on which the last rites of Sai Baba would be performed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X