For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாய்பாபா இறந்த அதிர்ச்சியில் 2 பேர் மரணம்!

By Siva
Google Oneindia Tamil News

புட்டபர்த்தி: சத்ய சாய்பாபா மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் புட்டபர்த்தியில் இருவர் உயிர் இழந்தனர்.

சத்ய சாய்பாபா உடல் நலக்குறைவால் இன்று காலை 7. 40 மணிக்கு உயிர் இழந்தார். இதனால் உலகில் உள்ள அவரது பக்தர்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். சிலர் சாய்பாபா இறந்துவி்ட்டதை நம்ப மறுக்கின்றனர்.

இந்நிலையில் சாய்பாபாவின் மரணச் செய்தியை கேட்ட அதிர்ச்சியில் புட்டபர்த்தியில் இருவர் மரணம் அடைந்தனர்.

சிறப்புப் பேருந்துகள்

சாய்பாபாவின் தீவிர பக்தரான கர்நாடக முதல்வர் எதியூரப்பா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். சாய்பாபா இறந்த செய்தியைக் கேட்ட மக்கள் கடைசியாக ஒரு முறை அவர் பார்ததுவிட வேண்டும் என்ற ஆசையில் புட்டபர்த்தி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

அவ்வாறு சாய்பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த கர்நாடகத்தில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகம் புட்டபர்த்திக்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.

இன்று முதல் இன்னும் சில நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

English summary
2 persons have died of shock in Puttaparthi after hearing the news of Sai Baba's demisal. Devotees from various places are rushing to Puttaparthi to pay their last tributes to him. Karnataka state transport corporation has provided special buses to Puttaparthi from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X