For Daily Alerts
Just In
சாய்பாபா மறைவு: தனி விமானம் மூலம் புட்டபர்த்தி விரைந்தார் மு.க. ஸ்டாலின்
சென்னை: சாய்பாபா இறந்ததையடுத்து துணை முதல்வர் மு.க. ஸ்டலின் இன்று சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி புறப்பட்டார்.
கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி முதல் சாய்பாபா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வந்தார். அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருந்தது. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலை 7.40 மணிக்கு சாய்பாபா இறைவனடி சேர்ந்தார்.
இதையடுத்து பாபாவின் பக்தரான தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி விரைந்தார் என்று கூறப்படுகிறது.
Comments
English summary
Tamil Nadu deputy CM MK Stalin has left for Puttaparthi today by a special aircraft on hearing Sai Baba's demisal news. Sai Baba passed away at 7.40 am today.
Story first published: Sunday, April 24, 2011, 12:31 [IST]