For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவில் எஸ்.பி. அலுவலக ஊழியையை கற்பழிக்க முயற்சி: பஸ் டிரைவர், கண்டக்டர் கைது

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இடுக்கி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணி புரியும் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.

கேரளாவில் செறுகோணி பகுதியைச் சேர்ந்தவர் சீமா. இவர் இடுக்கி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் ஆலப்புழா செல்லும் பேருந்தில் ஏறினார். அந்த பேருந்தில் வேறு பயணிகள் யாரும் இல்லை. சிறிது தூரம் சென்றதும் கண்டக்டர் ஜோமோன், சீமாவை திடீரென பலாத்காரம் செய்ய முயன்றார். டிரைவர் ஷாஜூ பேருந்தை வேகமாக ஓட்டினார். சீமா பேருந்துக்குள்ளே அங்கும், இங்கும் வேகமாக ஓடி அலறியதால் டிரைவர் பயத்தில் வாகனத்தை நிறுத்தினார்.

பின்னர் சீமா அளித்த புகாரின்பேரில் கண்டக்டர் ஜோமோன், டிரைவர் ஷாஜூவை போலீசார் கைது செய்தனர்.

English summary
A woman named Seema works in Idukki police superintendent office. A bus conductor tried to rape her in the bus for which the driver also helped. She managed to escape and filed a complaint. Police have arrested the driver and conductor.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X