For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குற்றாலம் மெயினருவியில் நடமாடும் மர்ம உருவம்?: சுற்றுலா பயணிகள் பீதி

By Chakra
Google Oneindia Tamil News

Coutallam Main Falls
குற்றாலம்: குற்றாலம் மெயினருவி பகுதி கடந்த ஒரு வார காலமாக அல்லோலகல்லோலப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள அருவியை மர்ம உருவம் கடப்பதாக பரவிய தகவல்தான் இந்த பரபரப்புக்கு காரணம்.

ஆஜானுபாகுவான தோற்றத்தில் சிம்ப்பன்சி வடிவில் தோன்றும் இந்த மர்ம உருவம் சில வினாடிகளில் மறைந்து விடுகிறது என்றும், சில நேரங்களில் அருவியின் மையப் பகுதியிலும், சில வேளைகளில் அருவியின் மேல் பகுதியிலும் இது தெரிவதாகவும் புரளி கிளம்பியது.

கடந்த 25ம் தேதி அதிகாலை 6.30 மணிக்கு குற்றாலத்திற்கு வந்த தென்காசியைச் சேர்ந்த ஜோதிடர் ராஜகுரு என்பவர் இந்த காட்சியை செல்போனில் படம் பிடித்துள்ளார். எதோச்சையாக அவர் குடும்பத்தினரை அருவி முன்பு நிற்கவைத்து படம் எடுக்கும் போது மர்ம உருவம் செல்போனில் பதிவாகி உள்ளது. இதை கவனித்த ராஜகுரு மயங்கி விழுந்து விட்டாராம்.

மர்ம உருவம் குறித்து ஜோதிடர் ராஜாகுரு கூறியதாவது,

தற்ச்செயலாக நான் செல்போனில் படம் எடுத்த போது அந்த உருவம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் நான் மயங்கி விழுந்து விட்டேன். அருவிப் பகுதியில் ஆவிகளின் நடமாட்டம் இருப்பதாக முன்பு கூறுவார்கள். எனவே, இதுவும் ஆவியாக இருக்கலாம். நான் மட்டுமின்றி இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இந்த உருவத்தை பார்த்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு புறம் மர்ம உருவம் நடமாட்டம் பற்றிய தகவலால் குற்றாலம் அருவியில் குளிக்க வருவோர் பீதியில் உள்ளனர். மறு புறம் மர்ம உருவத்தை பார்க்கும் நோக்கில் ஏராளமானோர் குற்றால அருவிக்கு படையெடுத்த வண்ணமும் உள்ளனர்.

English summary
Tourists report that some mysterious figure is crossing Coutallam main falls. One hand people are getting scared to go to the falls and on the other people are going to falls with the eagerness of seeing that mysterious figure.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X