'தள்ளிப் போன' ஒசாமா சாவு: ஒபாமாவுக்கு நன்றி கூறுவார்களா வில்லியம், கேட்?
இத்தனை ஆண்டுகளாக அமெரிக்கா ஒசாமா பின் லேடனை வலை வீசித் தேடி வந்தது. ஆனால் ஒசாமா அமெரிக்காவின் கண்ணில் மண்ணைத் தூவி தப்பித்துக் கொண்டே இருந்தார். இறுதியில் ஒசாமாவின் வீட்டில் வைத்தே அவரை அமெரிக்கப் படைகள் துப்பாக்கியால் சல்லடையாய்த் துளைத்துக் கொன்றன.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் நேற்று டிவியில் அதிகம் பார்த்த விஷூவல் மற்றும் செய்தி ஒசாமா கொலைச் செய்திதான். வேறு எதிலுமே நேற்று உலக மக்களுக்கு நாட்டம் போகவில்லை. அந்த அளவுக்கு டிவி முழுவதையும், செய்தி இணையங்கள் என அனைத்தையும் ஒசாமாதான் ஆக்கிரமித்திருந்தார்.
ஏப்ரல் 29ம் தேதியே பின்லேடனைக் கொல்ல உத்தரவிட்டு விட்டார் ஒபாமா. இருப்பினும் மே 2ம் தேதிதான் பின்லேடன் வீழ்த்தப்பட்டார். இதன் காரணமாக வில்லியம், கேட் மிடில்டன் திருமணத்தை உலக மக்கள் பார்க்கும் வாய்ப்பு பாதிக்கப்படாமல் போனது.
ஒருவேளை 29ம் தேதி பின்லேடன் கொல்லப்பட்டிருந்தால், ஒட்டுமொத்தமாக வில்லியம் திருமணத்தை யாரும் பார்திதருக்கவே மாட்டார்கள், கண்டுகொள்ளப்படாத திருமணமாக அது மாறிப் போயிருக்கும். வில்லியம், கேட் திருமணத்தை உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2 கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனராம். ஆனால் பின்லேடன் அன்றைய தினம் கொல்லப்பட்டிருந்தால் இந்த அளவுக்கு அது பிரமாண்ட திருமணமாக அமைந்திருக்காமல் போயிருந்திருக்கும்.
அந்த வகையில், இங்கிலாந்து ராஜ குடும்பம் ஒபாமாவுக்கு தேங்ஸ் சொல்லித்தான் ஆக வேண்டும்.
இத்தனைக்கும் ஒபாமாவுக்கு திருமணத்திற்கு வருமாறு இங்கிலாந்து ராஜ குடும்பம் அழைப்பு விடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!