For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒசாமா கொலைக்கு பழிக்குப் பழி வாங்க சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ள தலிபான்

By Chakra
Google Oneindia Tamil News

Taliban
காபூல்: அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் கொலைக்கு பழிக்குப் பழி வாங்க சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ளதாக தலிபான் அறிவித்துள்ளது.

இந்த அமைப்பின் ஆப்கானிஸ்தான் பிரிவின் தலைவர்களில் ஒருவரான தர்வான் சபி அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், வீரமரணமடைந்த சேக் ஒசாமா பின் லேடனின் மரணத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவோம். இதற்காக ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியுள்ளோம்.

இந்தப் பிரிவு அல்கொய்தாவுக்கு எதிராக போர் நடத்தும் நாடுகளுக்கும் அவர்களது ஏஜென்டுகளுக்கும் எதிராக மாபெரும் போரைத் தொடுக்கும்.

ஒசாமா பின் லேடன் விட்டுச் சென்ற பணிகள் தொடரும். அவர் உருவாக்கிய சட்ட-திட்டங்களின்படி எங்களது போரை முன்னெடுப்போம் என்று கூறியுள்ளார்.

அல்கொய்தா, தலிபான் ஆகிய அமைப்புகளின் பல முன்னணித் தலைவர்களை அமெரிக்கா ஒழித்துக் கட்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
With the killing of the al-Qaeda leader Osama Bin Laden, emotions are flaring not for the Obama administration who are on a moral high but for the al-Qaeda who have had to face the death of its leader in such a humiliating way
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X