10 ஆண்டுக்கு முன்பே பின்லேடன் வேட்டைக்கு அனுமதி கொடுத்தார் முஷாரப்?

அமெரிக்கப் படைகளின் தாக்குதலிலிருந்து தப்பி டோரா போரா மலைப் பகுதியை விட்டு பின்லேடன் இடம் பெயர்ந்ததைத் தொடர்ந்து இந்த ரகசிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பாகிஸ்தானில் பின்லேடன் எங்காவது தென்பட்டால் அவனை அமெரிக்கப் படையினர் வேட்டையாடுவார்கள், அதை பாகிஸ்தான் அனுமதிக்கும் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளதாம். அதன் அடிப்படையில்தான் தற்போது பின்லேடனை 'சோலோ'வாக வந்து வேட்டையாடி விட்டுப் போயுள்ளது அமெரிக்கா என்கிறார்கள்.
இந்த ரகசிய ஒப்பந்தம் காரணமாகவே இப்போது அமெரிக்காவுக்கு எதிராக பெரிய அளவில் குரல் கொடுக்க முடியாத இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த ரகசிய ஒப்பந்தப்படி, பாகிஸ்தான் மண்ணில் பின்லேடனோ அல்லது அல் ஜவாஹிரியோ இருப்பது தெரிய வந்தால் அங்கு அமெரிக்கப் படைகள் நுழைந்து இருவரையும் தனியாகவே வேட்டையாடும். இதை பாகிஸ்தான் அனுமதிக்கும். எதிர்ப்பு தெரிவிக்காது. அதன்பின்னர், இஸ்லாமிய நாடுகள் மத்தியில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அமெரிக்காவை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
ஓய்வு பெற்ற பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளதாக அந்த மீடியா செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்து ஒரு மூத்த அமெரிக்க முன்னாள் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரி கூறுகையில், புஷ்ஷுக்கும், முஷாரப்புக்கும் இடையே ஏற்பட்ட இந்த ரகசிய ஒப்பந்தம் குறித்து அதிபர் ஒபாமாவுக்கு நன்றாகத் தெரியும். மேலும் ஒசாமா எங்கு ஒளிந்திருக்கிறார் என்பதும் முன்பே அமெரிக்காவுக்குத் தெரியும். நல்ல சமயத்திற்காக நாங்கள் காத்திருந்தோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ரகசிய ஒப்பந்தத்தின்படியே தற்போது அத்தனையும் நடக்கிறது. எங்களது தாக்குதல் குறித்து வெளியுலகில் குய்யோ முறையோ என்று பாகிஸ்தான் கூச்சல் போடுவதும் கூட இந்த ரகசிய ஒப்பந்தத்தின்படிதான். இது குறித்து சர்தாரிக்கும், கிலானிக்கும் கூட நன்றாகத் தெரியும் என்றார் அவர்.
மொத்தத்தில் ஒசாமா பின்லேன் வேட்டையில் இன்னும் வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கும் ரகசியம் எத்தனையோ...
-
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது? -
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications