For Daily Alerts
Just In
ஸ்ரீரங்கத்தில் 41,984 வாக்கு வித்தியாசத்தில் ஜெயலலிதா அமோக வெற்றி!
கடந்த தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஜெயலலிதா இந்த முறை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார்.
இங்கு தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார் ஜெயலலிதா. இத்தேர்தலில் அதிமுக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதோடு, தனிப்பெரும்பான்மை பலத்தையும் பெற்று விட்டது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் வெற்றிச் செய்தி சற்று முன்பு கிடைத்துள்ளது.
ஸ்ரீரங்கத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை விட 41984 வாக்குகள் அதிகம் பெற்று ஜெயலலிதா அமோக வெற்றி பெற்றுள்ளார்.
ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவது இது 6வது முறையாகும்.
tn assembly polls 2011 srirangam jayalalitha admk தமிழக சட்டசபைத் தேர்தல் 2011 ஸ்ரீரங்கம் ஜெயலலிதா அதிமுக
English summary
ADMK chief Jayalalitha has won from Sri Rangam with 41,984 voter difference. She has defeated the DMK candidate Anandh. Jaya enters the assembly for the sixth time.
Story first published: Friday, May 13, 2011, 19:47 [IST]