For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா மகன் விஷம் குடித்து தற்கொலை

By Siva
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர் ராஜாவின் மகன் முஜிபுர் ரகுமான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

முன்னாள் அதிமுக அமைச்சர் அன்வர்ராஜா ராமநாதபுரத்தில் உள்ள பாரதி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருக்கு 2 மகள்கள், 4 மகன்கள். அவருடைய மகன் முஜிபுர் ரகுமான்(33). பாரதி நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வந்தார். அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது.

அவரது மனைவி ரகுமத் நிஷா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து விஷம் குடித்தார். உடனே குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அதிமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் கட்சியில் மீண்டும் முக்கியத்துவம் பெற அன்வர்ராஜா கடந்த 4 நாட்களாக சென்னையிலேயே முகாமிட்டுள்ளார். முதல்வர் ஜெயலலிதா தலைவர்களின் சமாதிகளில் அஞ்சலி செலுத்தச் சென்றபோது இவரும் கூடவே சென்றார்.

English summary
Former ADMK minister Anwar Raja's son Mujibur Rahman(33) has committed suicide by consuming poison. His wife Rahmath Nish a had committed suicide earlier on september 16, 2010.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X