வெறும் ரூ 20.88 கோடி மட்டுமே லாபம் ஈட்டிய எஸ்பீஐ!
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்கு வெளிநாடுகளிலும் நிறைய கிளைகள் உள்ளன. அரசின் வங்கி என்ற பெருமையும் இந்த வங்கிக்குதான் உண்டு.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் அனைத்து செலவினங்களும் போக இந்த வங்கி ரூ 1866.60 கோடி லாபம் ஈட்டியது. ஆனால் இந்த காலாண்டில் படு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது இந்த வங்கி.
இந்தச காலண்டில் வரிகள், ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட நிர்வாகச் செலவுகள் போக வெறும் ரூ 20.88 கோடியே நிகர லாபமாக மிஞ்சியுள்ளது இந்த வங்கிக்கு.
அதே நேரம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிடைத்த மொத்த வருவாயை விட, இந்த காலாண்டில் 18 சதவீதம் அதிகம் கிடைத்துள்ளது.
ஆனால் நிர்வாகச் செலவுகள் அதிகரிப்பு, ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயர்ந்தது போன்றவற்றால் நிகர லாபத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வங்கியின் பங்குகள் மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 6.34 சதவீதம் குறைந்தது.