For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறுத்தைகளிடம் கடிபட்டுச் சாகும் வால்பாறை குழந்தைகள்: ஓர் அலசல் ரிப்போர்ட்

By Chakra
Google Oneindia Tamil News

Leopard
வால்பாறை: வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் உள்ள குழந்தைகள் சிறுத்தைகளுக்கு பலியாகும் சம்பவம் தொடர்கதையாகி உள்ளது.

சிறுமி பலி:

வால்பாறையைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மூன்று வயது மகள் ஜனனி. நேற்று, வால்பாறையிலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள தாய்முடி எஸ்டேட்டில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு குடும்பத்துடன் விருந்திற்குச் சென்றார்.

இரவு 7 மணி அளவில் விருந்து முடிந்து ஜெகமூடி எஸ்டேட்டில் உள்ள மற்றொரு உறவினர் வீட்டிற்கு சக்திவேல், அவரது மனைவி, மகள் ஜனனி மற்றும் இன்னொரு மகள் ஆகியோர் தேயிலை தோட்டம் வழியாகச் சென்றுள்ளனர்.

பாய்ந்த சிறுத்தை:

அப்போது தேயிலைத்தோட்டத்தில் பதுங்கி இருந்த ஒரு சிறுத்தை, சிறுமி ஜனனியை குறிவைத்து பாய்ந்தது. சிறுத்தை சிறுமியின் கழுத்தை கவ்விக்கொண்டு, புதருக்குள் ஓட முற்பட்டது. சிறுமியின் தாயார் உதவி கேட்டு போட்ட கூச்சலில் சிறுத்தை சிறுமியை போட்டுவிட்டு ஓடிவிட்டது.

தாய் கண் எதிரே பலி:

சிறுத்தையால் கடிபட்ட சிறுமி ஜனனி, சம்பவ இடத்திலேயே தாயின் கண்ணெதிரில் துடிதுடித்து இறந்தார். சிறுமியின் உடல் முடீஸ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்கதையாகும் உயிர்பலி:

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இதுவரை மூன்று குழந்தைகள் சிறுத்தைகளுக்குப் பலியாகியுள்ளனர். இது தவிர, கடந்த ஆண்டு வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரு குழந்தைகள் சிறுத்தையினால் தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தனர்.

சிறுத்தை மட்டுமல்லாமல் யானைகளும் அடிக்கடி மக்கள் வாழும் பகுதிக்குள் நுழைந்து விடுகிறது. யானையிடம் மிதிபட்டு கடந்த ஆண்டுகளில் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். இது தவிர மலைப்பாம்புகள், செந்நாய் போன்றவற்றின் தொல்லைகளும் அதிகரிக்கிறது. நேற்றுகூட, வால்பாறை தொழிலாளர் குடியிருப்புக்குள் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்தது.

கண்டுகொள்ளாத எஸ்டேட் அதிபர்கள்:

கடந்த பலவருடங்களாக எஸ்டேட் பகுதிகளில் மின்விளக்கு அமைக்குமாறு அதன் உரிமையாளர்களை வனத்துறை எச்சரித்து வருகிறது. ஆனால் பலரும் அதை காதில் வாங்கிக்கொள்வதில்லை. பொதுமக்களையும் இரவு இருட்டியதற்குப்பின் வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டாம் என்று வனத்துறை எச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

முன்னெப்போதும் இருந்ததை விட, வால்பாறை பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இதனால் தொழிலாளர்கள் எஸ்டேட் பகுதிகளில் எப்போதும் அச்சத்துடனேயே நடமாட வேண்டி உள்ளது. வேட்டை தடை செய்யப்பட்டதனால் வால்பாறை பகுதிகளில் சிறுத்தைகளின் இனப்பெருக்கம் அதிகரித்து வருவதும் ஒரு காரணம் என்கிறார்கள் சூழலியளாளர்கள்.

போராட்டம்:

இந்நிலையில் சிறுத்தைகளின் அட்டகாசத்தை அடக்கும் வரை சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கமாட்டோம் என எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் நேற்று போராட்டம் செய்தார்கள். மேலும், மாவட்ட ஆட்சியர் வந்து எங்களது பாதுகாப்பான வாழ்விற்கு உறுதியளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். இதனால் அப்பகுதியில் இரவு பத்து மணி வரை பதட்டம் நீடித்தது.

English summary
Valparai area kids have got killed by leopards. Even last night a 3-year old girl was killed by a leopard. Apart from this, elephants also kill scores of people working in the estates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X